Friday, May 7, 2010

மின்சாரக்கம்பிகள் மீதமரும் பறவைகள்..

கருகி மடியும்
காதற் கம்பிகளில்
தெரிந்தே தொங்கும்
பறவைகள்..

பல பீனிக்ஸ் எனவும்
சில சிட்டுக்குருவியெனவும்
அபூர்வமாய் ஜோடி புறாவெனவும்..

விட்டுச்சென்ற சுவடுகளோடு
காதற் கம்பிகள் நிரந்தரமாய்..

ஒளித்து வைக்கப்பட்ட மழலைப் பொழுதுகள்..

நீர்க்குமிழிகள் அடைத்த
வண்ணக் கோலிகளும்
கச்சிதமாய் செதுக்கிய
செல்லாங்குச்சிகளும்
ஆக்கர் பதிக்கப்பட்டு
உருக்குலைந்த பம்பரங்களும்
மாமன் வாங்கிக்கொடுத்த
பல்லாங்குழியும்
சிறுவீடு கட்டி
சமைத்துக் கழித்த
செப்புச்சாமான்களும்,
அடுக்குமாடிக் குழந்தைகளின்
கீபோர்டு பொத்தான்களுக்கடியில்
ஒளித்துவைத்திருக்கிறது
அழகான மழலைப் பொழுதுகளை..