Thursday, February 5, 2009

எடுத்துக்காட்டாய் நாம்..

சமூக அவலங்களுக்கு
சிறுபிள்ளையாய் கண்ணீர்
சிந்தாதே..

சிந்தித்துப் பார்..
சிதைந்து போன சமூகத்திற்கு
சாட்சியமாய் நீயும் இருக்கிறாய்..

சகமனிதனின் வலி உணராதவரை
சர்வமும் படைத்தவனை பூஜிப்பதில்
சத்தியமாய் ஒரு ப்ரோயோஜனமுமில்லை..

சமனற்ற கோளத்தைதான்
சீர்செய்ய லாகாது..
சீர்குலைந்த சமுதாயத்தையுமா
சீக்கிரம் மாற்ற வியலாது??

யார் மாற்றுவார்
என்பதல்ல கேள்வி..
நாம் மாறுவோம்..
நமைப்பார்த்து உலகம் மாறும்..

No comments: