Saturday, January 30, 2010

கடவுள் பிறந்த கதை... (உ.த.ம.அ)

பகுத்தறிவு கற்பபைக்குள் புலன் அடக்கி கிடந்த காலம்..... ஆதி மனிதன் அப்போது தான் உருவான காலம்.... குகைக்குள், காட்டுக்குள் விலங்கோடு விலங்குகளாய் விளையாடி திரிந்த காலம்...... ஆறாம் அறிவு பரிணாம வளர்ச்சி தொட்டதோடு சரி...பயன்பாடு கொள்ளாத காலம்.....

கொட்டும் மழை..... தடுத்திட வழி தெரியாது, ஒண்டி கிடக்க இடம் கிடையாது.... அறிந்த ஆயுதம் வேல் கம்பு மட்டுமே.... மழையோடு வேல் கம்பு பலபரிட்சை செய்தது.... அடங்கி போனது.....அறியா மூளையில் விச முள் தைத்தது.... என்னால் அடக்க முடியா, வெல்ல முடியா சக்தி ஒன்று உள்ளது என்று அடிபணிய சொன்னது அறியாமை...... காட்டு தீ கட்டுப்படுத்த தெரியாது இன்னொரு சக்தி, நிலநடுக்கம் காரணம் தெரியாது இன்னொரு சக்தி...... இப்படி தனக்கு உணர முடியாத தன்னால் தடுக்க முடியாத நிகழ்வுகளை சக்திகளாக நினைத்தது காட்டு மூளை.....

பஞ்ச பூதங்களை வழிபட தொடங்கினான்.... நாளடைவில் அதற்கான உருவம் தேவை பட்டது..... தனக்கு இணையான எதிர் சக்தி எனில் என்னால் வெல்ல முடியும், என்னால் வெல்ல முடியா சக்தி எனில் அது வேறு ஏதோ அதிகமாய் கொண்டு இருக்க வேண்டும்..... ஆக எனக்கு இரண்டு கைகள் என் எதிர் சக்திக்கு நான்கு கைகள்.... எனக்கு ஒரு தலை எதிர் சக்திக்கு நான்கோ ஐந்தோ தலைகள்.....இப்படி உருவம் கொடுத்தது மூடத்தனம்......

சற்றே நாகரீகம் வளர வேட்டையாடி காட்டுக்குள் தங்கி போனவனுக்கும் , ஆற்றங்கரையில் விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கும் இடையே விழுந்தது முதல் பிரிவு..... அவன் அவன் தன் போக்கிற்கு தனக்கான கடவுளையும் வழிபடு முறைகளையும் உருவாக்க தொடங்கினான்....

இப்படி அறிவு, இயல்பு அறியா மனித மூளை கண்டு பிடித்த எதிரி தான் கடவுள்.... அறிவியல் வளர வளர எதிரி அகப்பட்டு கொண்டே வருகிறான்.....

இதில் எங்கு துவங்கியது பிரிவினை கலாச்சாரம், சாதி எங்கு முளைத்தது என்பது எல்லாம் இன்னும் சிறுபிள்ளைத்தனம்.....

////////மதங்கள் எவ்வாறு தோன்றியிருக்கும்? /////

இன்று நடன கலையில் நாம் பல விதங்கள் சொல்கிறோம், பரதம், குச்சிபிடி, மேற்கத்திய நடன வகைகள் என பல விதம்.... எல்லாமே இசைக்கு உடலை அசைக்கும் நிகழ்வு தான் எனில் ஏன் இத்தனை வகைகள்???? சற்றே சிந்தித்தோம் எனில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை அசைவுகளின் விதங்கள் வேறு பட வேறு பெயர்கள் வெவ்வேறு விதிமுறைகள்.... அதே போல் தான் வழிபடும் விதங்களில் வேறுபட, ஒரு வழிபாட்டு முறை ஒத்துபோகாத கூட்டம் தனி தனியாக தமக்கு ஒரு புதிய குழு புதிய வழிபடு முறை என உருவாக்கி பிரித்து பார்க்க தொடங்கியது..... பின் அந்த அந்த குழுக்களில் உருவான கற்பனை கதை ஆசிரியர்கள் அவர்களுக்கான நாயகர்களை உருவாக்க தொடங்கினார்கள்.....

உதாரனமாக இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே உள்ள விஷயங்கள் யாவும் ஒப்பிட்டு பார்த்தீர்கள் ஆனால் முற்றிலும் மாறுபடும்.... இந்துக்கள் காலணிகளை அவர்கள் வழிபடு தளத்தின் வெளியே விட்டு சென்றால் முஸ்லிம்கள் அணிந்தே செல்வார்கள், இந்துகள் பசு கடவுள் என்று சொன்னால் அவர்கள் அதை கசாப்பு கடை பொருளாய் பார்பார்கள், இவர்கள் தாடி மீசையோடு கோவில் செல்ல கூடாது என்று சொன்னால் அவர்கள் அது தான் அவர்கள் அடையாளமாய் சொல்வார்கள்.... இப்படி ஒத்து போகாத எண்ணங்கள் தனி தனி குழுவாக பிரிந்ததே மதம்......

நீங்களோ நானோ ஒரு புதிய முறை கண்டு பிடித்து, சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு , ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி, அதில் ஒரு கூட்டத்தை சேர்த்தோம் எனில் புதிய மதம் ஒன்று உருவாகும்..... அவ்வளவு தான்.....

////////////ரமணர், வள்ளலார், இராமகிருஷ்ண பரமகாம்ஷர், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி...இவங்க எல்லாம் இங்கே சொன்னெதெல்லாம்......அத பத்தி........ ////

ஓசோ சொல்லி குடுத்தது எல்லாம் வாழ்க்கை எப்படி எளிமையானது எப்படி இனிமையாய் வாழ பழகுவது எனபது போன்ற தத்துவங்கள் தான்..... அவரை பின் பற்றிய கூட்டம் அவர் எது எல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அதை எல்லாம் அவர் பெயரால் அவரை கடவுளாக சித்திகரித்து சொல்ல ஆரம்பித்தது எனபது தான் உண்மை.....

ஜென் குருக்கள் யாரும் தங்களை கடவும் என்றோ, கடவுள் இது எனவோ போதிக்கவில்லை.... ஜன கதைகள் புத்தகம் படித்து பாருங்கள், வாழ்கைக்கான வாழும் முறைகள், வாழ்வியல் தத்துவங்கள் மட்டுமே அவர்கள் சொல்லி குடுத்த வரங்கள்.....

உதாரனமாய் ஒரு கதை....

ஜென் சீடன் : மலையின் உட்சியை அடைய எங்கு இருந்து துவங்குவது ?
ஜென் குரு : மலையின் உட்சியில் இருந்து துவங்கு ....

ஒவ்வருவரும் ஒரு சித்தாந்தம் சொல்லி போனார்கள்..... அனைத்தும் அறிந்த நிலை ஞானம் என்றார் சிலர், ஏதும் இல்லா நிலை ஞானம் என்றார் சிலர், ஆசை வேண்டாம் ஒரு சித்தாந்தம், அத்தனைக்கும் ஆசை படு ஒரு சித்தாந்தம்.....
இவை யாவும் நாம் என்ன எடுத்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது....

முதலில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் சாதிகள் உருவானது ..... தொழில் ரீதியாக பிரித்து பார்க்கப்பட்ட வர்க்க பேதம் சமய நூல்கள், சாத்திரங்கள் என்ற விச கிருமிகள் உள்ளே நுழைய வேர்விட்டு வளர்ந்து இன்று புற்று நோய் போல் பரவி கிடக்கிறது......

கடவுள் எல்லாமே கற்பனை தான் என்பதற்கு நாம் அவற்றிற்கு கொடுத்திருக்கும் உருவங்களே சாட்சியாகி விடும். நம்மால் கடவுளை நமக்குத்தெரிந்த உருவங்களில்தான் பொருத்திப் பார்க்கத் தெரிந்தது. கூடுதலாக கொஞ்சம் கை கால் தலை என சேர்த்து பிரம்மாண்டப்படுத்தி இருப்போம்! அவ்வளவுதான். மற்றபடி கடவுளைப் பற்றி பெரிதாக கதையளக்கவும் யாருக்கும் முடியவில்லை!


தன்னம்பிக்கை இல்லாத மனிதன் அழியினும் வாழினும் என்??????? இதுவரை எந்த புராணங்களும், மத கோட்பாடுகளும் நம்மை இறை என்ற ஒரு சக்திக்கு முன்னால் மண்டியிட சொல்லி தந்ததே தவிர தன்னம்பிக்கை கொண்டு தனித்து வாழ சொல்லி தரவில்லையே ஏன் ? ஒரு ஒரு மனமும் தன்னம்பிக்கை கொண்டு செயல் பட துவங்கி விட்டால் இறை இரையாய் போகும் என்ற அட்சம் தான்.....

ஒரு கண்மூடித்தனமான பயணபகுத்தறிவு எனபது கடவுள் எதிர்ப்போ, மத எதிர்ப்போ, சாதிய எதிர்போ அல்ல.....
உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்து தெளிதல்....... பகுத்து அறிந்து பார்கின்ற அறிவே பகுத்தறிவு...... இவற்றை செய்ய துவங்கினால் முதலில் நாமை சூழ்ந்து நிற்கும் இந்த கடவுள் , மதம் , சாதி போன்றவற்றை எதிர்க்க நேரிடுகிறது.... அவை யாவும் பகுத்தறிவாளர் வேலை என சமூகம் முத்திரை இட்டது...... ஏன் என்று பார்த்தால் மற்ற யாவரும் பகுத்தறிவு பயன்படுத்த கூடாது.... அவன் பயன் படுத்தும்முன் சாமிய எதிர்குற, நம்ம மதத்த இழிவு படுத்துற, நம்ம சாதிய மீருறனு கட்டி போட்டு வைச்சா தான் இவங்க பப்பு வேகும் .....

ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்"
குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம்.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை(கோபம்,பொறாமை,சுயநலம்)சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம்.

கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன.கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.கடவுளின் நம்பகத்தன்மையைப்பற்றிய எனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பதிலுக்கு என்னிடமே கேள்வி கேட்பவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன்.புத்தராகட்டும்,கிருஷ
்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம்.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதெ போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வழமான வாழ்வைக்கொடுங்கள்.இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.-OSHO.



அப்துல் ரெஹ்மான் கவிதையில் இருந்து...

இடிக்கப்படும் வீடுகளில் நீ இடிக்க படுகிறாயா? கட்ட படும் வீடுகளில் நீ கட்டபடுகிறாயா?

நீ இந்துவா ? முஸ்லிமா ? கிறிஸ்டீனா ?

1 comment:

Sethuramalingam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்