Saturday, January 9, 2010

தனிமை பழகு..

ஆளில்லா அறைகள்..
அலறாத தொலைக்காட்சி..

அழையாத கைபேசி..
விரல்படாத அழைப்புமணி..

திறக்காத சன்னல்கள்..
தீண்டாத குளிர்காற்று..

சுழலாத மின்விசிறி..
சத்தமிடாத சுவர்க்கோழி..

இசையற்ற இரவுகள்..
புன்னகையற்ற பகல்கள்..

முத்துக்களற்ற கொலுசு..
மூச்சுத் திணறும் தனிமை..

திகட்டும் தனிமைகளில்
தூங்கி வழிகின்றன
என் கனவுகள்..

இப்பொழுதெல்லாம்,
என்னறைகளில்,
ஒட்டடைகள்
நீக்கப்படுவதில்லை..

இருந்தும் நான்,
தனிமை பழகுகிறேன்..
கண்ணீர் கரைக்கும்
தலையணைக்காகவும்,
தோள் தாங்கும்
சுவர்களுக்காகவும்..

(உரையாடல் கவிதை போட்டிக்காய் எழுதியது..
http://tamil.blogkut.com/uraiyaadal.php )

16 comments:

SSR said...

தனிமை பழகலாம். ஆனால் பலகாலம் வாழ்கிற மாதிரி இருக்கு
தனிமை கொடுமை கொடுமையே

SSR said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

விஜய் said...

மிகவும் பிடித்திருக்கிறது

வெற்றிபெற வாழ்த்துக்கள்

விஜய்

hemikrish said...

மிகவும் அருமை ரமா...all the very best for u...

சுரபி said...

@sethu
Thanks sethu

@Vijay
Thank you sir for ur visit and comments..

@Akka
Thanks a lot akka..

Unknown said...

nice..

வெற்றிபெற வாழ்த்துக்கள் .. :)

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக உள்ளது தோழி, வரிகள் மிக அழகு..கவிதை போட்டியில் வெற்றி பெற என் மனமார்த்த வாழ்த்துக்கள்...

சுரபி said...

நன்றி ஆறுமுகம், கமலேஷ்.. :)

Fan of ..laajee.., said...

Akka,
padichittu kannulam kalangittu ka., so cute.. miss u ka..

பத்மா said...

thanimaiyile inimai
all the best
padma

Mithra said...

ரமா "வெற்றி"!!!!!!!

அழகு கவிதை..........

ராம்குமார் - அமுதன் said...

Nalla Irukkunga.... வெற்றி பெற வாழ்த்துகள்....

ராம்குமார் - அமுதன் said...

Nalla irukkunga... வெற்றி பெற வாழ்த்துகள்...

Chockalingam said...

romba nalla iruku rama

A.Ebenezer said...

nice one thozhar...

சுரபி said...

anaivarukkum nandri.. :)