Saturday, September 6, 2008

உவமைகள் வேண்டாம்...

பூக்கள் எனப்பேசியே வாடிப்போனோம்
நிலா என்றெண்ணியே தேய்ந்துபோனோம்
சிலை எனச்சொல்லியே கல்லானோம்
நதி என்றழைத்து நாதியற்றுப்போனோம்

உள்ளக் கவலையுடன்
உவமைகளைப் படிக்கையில்
உவகை கொள்ள முடியவில்லை..

இவள் "இதுமாதிரி" என்றில்லாமல்
இவள் இவள்தானென்று இயல்பாய்
இயம்புகிற இதயம் பார்க்க ஆசை..
இருக்கிறானா அப்படியொரு கவிஞன்??

No comments: