Saturday, November 29, 2008

தேவை ஆண்டவனில்லை..அன்பு மட்டுமே..

அன்புக்கு காரணங்கள் தேவையில்லை
ஆனால்
ஆண்டவனுக்கு காரணம் தேவையாயிருக்கிறது..

அவனின்றி அசையாது ஓர் அணுவும்..
அசையும் அணுகுண்டுகளிலும்
அவனிருக்கிறானா என்பது அவனுக்கே வெளிச்சம்..

அவன் பெயரில் நடக்கும்
அத்தனை தவறுகளுக்கும்,
அமைதியாகவே இருக்கிறான் அவன்..

உயிர் பெற்றால், உணர்வுற்றால்
தீவிரவாதத்தின் துப்பாக்கிக்கும்
அழிவுசக்திகளின் அணுகுண்டுவுக்கும்
அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ??

சகமனிதனின் வலி உணராதவரை
சர்வமும் படைத்தவனை பூஜிப்பதில்
சத்தியமாய் ஒரு ப்ரோயோஜனமுமில்லை..

ஆண்டவனைப் புரிவதில் தோல்வியுற்றாலும்
அது அவசியமில்லைஎன்றே தோன்றுகிறது..
வாருங்கள்.. அழிவை நோக்கிப் பயணிக்கும்
நம்மை நாமே காப்பதில் வெற்றி காண்போம்..

2 comments:

Rajthilak said...

// அவனின்றி அசையாது ஓர் அணுவும்..
அசையும் அணுகுண்டுகளிலும்
அவனிருக்கிறானா என்பது அவனுக்கே வெளிச்சம் //

நச்சுன்னு இருக்கு...

Unknown said...

u r saying "Anbe Sivam" i am saying "Sivame Anbu" Both r equal .Thats why v r gud friends