Saturday, November 29, 2008

வாழ்க்கைச் சூத்திரம்..

கடைசி வரை
காணாமல் போய்விடக்கூடும்
வெற்றியின் சுவடுகள்..

கடைசி வரை
தெரியாமல் போய்விடக்கூடும்
காத்திருத்தலின் அவசியம்..

கடைசி வரை
புரியாமல் போய்விடக்கூடும்
வாழ்க்கையின் ரகசியம்..

ஆனாலும் என்ன??
இருக்கும் வரை
இன்னொரு மாற்றத்திற்காய்
இலவுகள் காப்போம்..

நினைத்தது கிடைக்காவிடினும்
கிடைத்ததை கொண்டு
படைக்கலாம் இன்னுமொரு உலகம்..

எல்லாருக்குமே தரையிலிருந்து
எட்டும் தூரத்தில்தான்
வானம்..

சிறகுகள் இருந்தால்தான்
பறக்க முடியும்
என்பதல்ல சூத்திரம்..

சிந்தனை தெளிவுற்றால்
சாமானியனுக்கும் சாத்தியம்
சரித்திரமும், சாம்ராஜ்யமும்..

சமனற்ற கோளத்தைதான்
சீர்செய்ய லாகாது..
சீர்குலைந்த சமுதாயத்தையுமா
சீக்கிரம் மாற்ற வியலாது??

யார் மாற்றுவார்
என்பதல்ல கேள்வி..
நாம் மாறுவோம்..
நமைப்பார்த்து உலகம் மாறும்..

No comments: