Saturday, November 29, 2008

சில கிறுக்கல்கள்..

நான் தான் என்பது கூட
நினைவு படுத்தப்பட வேண்டியிருக்கிறது
நீ மனதினுள் நுழைந்த பின்..

உன்னைப் போல் பேசுகிறேன்,
உன்னைப் போல் நடக்கிறேன்,
உன்னைப் போல் சிரிக்கிறேன்..
மொத்தத்தில் என்னைத் தொலைத்து
முழுதாய் நீயாக மாறிவிட்டேன்..

என் இயல்பைத் தொலைக்கவிட்டு
இம்சித்துப் பார்க்காதே..
"பைத்தியம்" என்று பட்டம் வாங்கும்முன்
பதிலை சொல்லிவிடு "சம்மதமென்று"..
=====================================
காதலும் தொடர்வண்டி தான்..
அவனைத் தொடர்ந்து நீ..
உன்னைத் தொடர்ந்து நான்..
என்னைத் தொடர்ந்து யாரோ..??

நினைப்பது கிடைக்காது என்றாலும்
தொடர்தல் தொடர்கிறது, அழகான
நினைவுகளோடும் இனிமையான இசையுடனும்
தடதடத்த தண்டவாளம் எனும் வாழ்க்கையில்..
=======================================

No comments: