Friday, December 25, 2009

நானெனப்படுவது.....

சற்றுமுன் எறியப்பட்ட
விச வார்த்தைகளின்,
வீரியம் தாங்காது
சன்னல்வெளி வெறித்தேன்..

நெடுநாட்களா யொழுகும்
நீர்த்தொட்டியின் துளிகள்,
கருங்கல்லின் கூர் நுனியின்
மேற்பட்டு சிதறியது..

வலித்திருக்குமோ -வென
கம்பிகள் தாண்டி - என்
கருவிழிகள் பதித்தேன்..

தொடர்ந்து விழும்
நீரின் மென்மையில்..
கல்லின் கூர்மை,
பச்சை தரித்திருந்தது..
சுற்றியிருந்த புற்கள்,
வெண்பூ பூத்திருந்தன..

சற்றுப் பின்வாங்கினேன்..
நானெனப்படுவது
கூரிய கல்லா??
மென்மைத் துளியா??

5 comments:

Rajthilak said...

நீங்கள் நீங்களாவே இருங்கள் ...

Unknown said...

பொறாமையா இருக்கு... எனக்கு இந்த மாதிரி ஒரு கவிதை எழுத தெரியலையே.. :-)))

extraordinary..

my best wishes...

sen said...

அருமை :)

சுரபி said...

@Arumugam
Ithu rombave over.. :))))
Thanks for ur comment

@Tamil
Many thanks.. :)))

கண்மணி/kanmani said...

அருமையான சிந்தனை
தெறிக்கும் துளியாக இருந்து பூக்களை மலரவிடுங்கள்