Thursday, February 6, 2014

நினைவுகளின் மீட்டமைப்பு..

இரவின் ஆழ் மௌனத்தைக்கொன்று கொண்டிருக்கும் என் மடிக்கணினியின் வெளிச்சத்தில் அடிக்கடி அலுத்துக்கொள்கிறதொறு கரப்பான்பூச்சி.. அடர்ந்த பனியின் இறக்கமும் பூட்டமறந்த கதவின் கிறீச்சலும் காய்ச்சலை அதிகப்படுத்துகிறது. அன்றைய அரைகுறை நினைவுச்செல்களில் தேங்கிக்கிடக்கிறது சவுக்கின் சுளீர் சாட்டையடிகளும் மொட்டையடித்த நிலவுமொழியின் அழகும் மற்றுமென் மதிப்பிற்குரிய நண்பர்களின் மதத்தை தாங்கிப்பிடிக்கும் கதறல்களும்.. நிதர்சன வாழ்க்கையும் சுயமரியாதையும் சுட்டெரிக்கப்படுகிறது சுயநலக்கோடுகளில். அத்தனை செல்களும் செத்துவிடுகிறது விடியலில். வழியும் இரத்தத்தை துடைத்தெறிந்து காய்ச்சலுற்ற சிலிக்கானை காப்பாற்ற ஓடும் அதீத அறிவின் அடுத்த படியில் நான். நீங்கள்? நம்பிக்கையின் முற்றுப்புள்ளி இரவோ பகலோ இன்னும் இரவுகளுண்டு.. பகல்களுமுண்டு..

No comments: