Thursday, February 6, 2014

கொடுங்காடு..

அதொரு மிகச்சிறிய காடு.. வேரற்ற மரங்களும் இலைகளற்ற கிளைகளும் கொண்டதொரு கொடுங்காடு.. வானமற்று காற்றுமற்று காய்ந்து போனதொரு கருங்காடு.. மரித்துப்போன அக்காட்டினை அடக்கம் செய்யவும் இன்னுமொரு பிழைப்பிற்கான பதியமிடவும் தேவைப்படுகிறது மற்றுமொரு காடு.. எங்கிருந்தோ பெய்த மழைமுத்தின் ஈரம்கொண்டு துளிர்த்துவிட துடிக்கும் கருங்காட்டின் கழுத்தை நெரித்து மேலெழும்பும் புதியகாட்டின் பல்லிலிப்பில் அடகுவைக்கப்படுகிறது புதியதொரு வாழ்வு..

No comments: