Wednesday, November 23, 2011

அன்பின் அளவுகோல்

உன் கனவுகள் மிக அடர்த்தியானது.
அதனுள்ளிருக்கும் நினைவுப்படிமங்கள் முழுதும்
என் பெயரெழுதிச் செல்லும் வழிதேடியலைகிறேன்.
கள்ளிச்செடியின் பாற் கொண்டெழுதியும்
கற்களின் கூர்நுனி கொண்டெழுதியும்
படிமங்கள் கீறுகிறேன்.
இன்னும் இளகாத படிமங்கள் மீது
விரல்களின் குருதி கொண்டெழுதியும் பார்க்கிறேன்.
இன்னும் இறுகிப்போகும் படிமங்கள் மீது
இரும்பின் இளஞ்சூடு கொண்டெழுதியபோது
கூழாகிப்போகின்றன கனவின் அனைத்துப்படிமங்களும்.
கரைந்தோடும் நேரத்தில் அவசரமாய் தேடுகிறேன்,
மருந்துச்சாறின் வலிமையையும் மயிலிறகின் மென்மையையும்..

No comments: