Wednesday, November 23, 2011

நிலவின் பிம்பங்கள்

நிலவைப்பற்றிய நினைவுகளென்றால் அவளுக்கு பெரும்பயம்.
அதனளவு உருண்டை வாயில் திணிக்கப்படும் என்பதாய் இருக்கலாம்.
அங்கே கொண்டுபோய் விட்டுவிடுவேனென்பதாய் இருக்கலாம்.
நினைத்தால் வீடுதிரும்ப இயலாதென்பதாய் இருக்கலாம்.
அவளது பொம்மையும் செப்புச்சாமனும் அங்கில்லாதமையால் இருக்கலாம்.
அதனைச் சூழ்ந்த இரவுக்கம்பளியின் கிழிசலும் கருமையுமாய் இருக்கலாம்.
அதனுள் ஓய்வெடுக்கும் சூனியக்கிழவியின் உருவமாய் இருக்கலாம்.
ஆர்ம்ஸ்ட்ராங் கூட தங்கமுடியாத தனிமையாய் இருக்கலாம்.
இவையெதையும் காரணங்களாய் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னெதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

No comments: