Friday, September 11, 2009

தமிழகத்தில் ஈழ போராட்டம்..

போராட்டம்..??
எப்படி நடக்கிறது??
எதுவரை நீடித்தது??
எதுவரை நீடிக்க முடிந்தது??

சாகும்வரை உண்ணாவிரதம் என்றவரெல்லாம்
சாத்துக்குடியும் குளுக்கோசுமாய் சமுதாயத்ததை
சாடி சத்தியசீலர்கலாய் சிவப்புக்கொடிகாட்டி
சீக்கிரமே காணாமல் போனார்கள்..

துடிப்புள்ள இளைஞர்களையும் மாணவர்களையும்
திறன்பட செலுத்தாமல் உணர்வுகளைத்
தூண்டிவிட்டு சரியாய் எரியாமல்
திசைக்கொன்றாய் திரிகிற நம் எதிர்காலங்கள்..

பேச்சுகளும் போராட்டங்களும் இதுவரை
பத்து உயிர்களை காத்தனவா??
உணர்வுகளால் கட்டுண்டு தன்னுயிர்களை
உதிரவிட்டு உறகவுகளையும் கதரவைக்கிறதுதானே??

அமெரிக்காவோ ஜப்பானோ யாரோஎவரோ
அனைவரிடத்திலும் கையெழுத்திட்டு இன்னும்
அண்ணாந்து பார்த்து கலியுகத்தில்
ஆண்டவனை எதிர் நோக்கியிருக்கிறோம்..

சரியான சட்டம் இல்லை..
சமாதனமான மக்கள் இல்லை..
சீர்படுத்தும் தலைவன் இல்லை..

ஒருமாதமோ ஒருவருடமோ கதறினோம்..
ஒவ்வொரு உயிராய் பறக்கவிட்டோம்..
பத்தி பத்தியை செய்திகளானோம்..
பாதை சரியில்லாமல் படுத்துறங்கினோம்..

எங்கே செல்கிறோம் நாம்
என்று தெரியாமலே விட்டில்பூச்சியை
நம் சகோதர சகோதரிகள்..

No comments: