Monday, September 7, 2009

தோழன்..

நினைவு தெரிந்த நாட்களிலிருந்து
சேர்த்து வைத்த தோழமைகள்..

நட்புக்குடம் நிரம்பினாலும் வற்றாத
நண்பனைப்பற்றி நான்கு வார்த்தைகள்..

புரியாமல் புன்னகைத்த நட்புகளுக்கிடையில்
புன்னகையில் புரிந்த நட்பூக்கள்..

விளையாட்டுத் தனமான கோபங்களுக்கிடையில்
விழிநீர் கலங்கச்செய்த சமாதானங்கள்..

பயந்து பின்வாங்கிய பொழுதுகளில்
பொறுமையாய் போதித்த அறிவுரைகள்..

கேட்கத் தயங்கிய வேளைகளில்
கேள்விகளில்லாமல் செய்த உதவிகள்..

தேளாய்க் கொட்டிய விடங்களுக்கிடையில்
தேனாய்ப் பாராட்டிய பண்புகள்..

மிகமுக்கியமாய்,
எவ்வளவுதான் உன்னை கிண்டலடித்தாலும்
எதிர்வினையின்றி சிந்தும் சிரிப்புகள்..

என்ன சொல்ல இதற்குமேல்???
எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம்போல
என்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்,
என் என்பதைவிட எங்களின் நண்பன் சொக்கலிங்கம்..

No comments: