Monday, September 7, 2009

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..

எட்டியிருக்கும் நிலவை ரசிக்க
ஏறத்தேவையில்லை ஏணிகள்..
எட்டிப்பிடித்து நிலவைத் தொட
ஏறியே ஆகவேண்டும் ஏணிப்படிகள்..

இதுவரையிலும் நீ
ஏறிவந்த ஏணிகளில்
எத்தனை ஆணிகளோ தெரியாது..
இனியேறப் போகும் ஏணிகளிலும்
இருக்கும் ஆயிரமாயிரம் ஆணிகள்..
காற்றைப் போல் கடந்து செல்..
வலிகளைக் கடந்து கிடைக்கும்
வெற்றி இனிக்கவெ செய்யும்..
வாழ்த்துகிறேன்…

சாதாரணர்கள் ரசிப்பார்கள்..
சாதிப்பவர்கள் படைப்பார்கள்..
புதுவுலகம் படைப்பாயென்று நம்புகிறேன்..

வாழ்க்கைப் பந்தயத்தில் முதலாவதாய்
வெற்றிப்பதக்கம் பெற வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..

No comments: