Tuesday, March 16, 2010

வாழ்த்தொன்று பெறுங்கள்

வெம்மையின்
பார்வையொன்றில்,
காய்ந்திருக்ககூடும்
தெருவோர நீர்த்தேக்கமொன்று..

பிளவுபடும்
நிலத்தினிடையில்,
வற்றியிருக்கக்கூடும்
ஊரைக்கடந்த குளமொன்று..

மழைகாணாத
வருத்தத்தில்,
கீழிறங்கியிருக்கக்கூடும்
கிணறொன்றின் கொள்ளளவு..

தாகம் தீர்க்கும் வழியற்று
ஏமாறக்கூடும்..
கூண்டற்ற பறவைகளும்,
வீடற்ற விலங்குகளும்..

நீர்மொண்டு வையுங்கள்
மொட்டைமாடியிலும்,
முற்றத்தின் ஓரத்திலும்..

இயற்கையின்
விதியொன்றிற்கு,
வாழ்வெழுதி
வாழ்த்தொன்று பெறுங்கள்..

[Src: Fwd Mail.. ;) ]

No comments: