Wednesday, March 17, 2010

நண்பகலொன்றில்..

விரல்களின்
செந்நிற அச்சுப்பதிந்த
கன்னங்களுக்கிடையிலும்
கொஞ்சமாய்
வழிந்திருந்த உமிழ்நீரின்
பிசுபிசுப்புக்கிடையிலும்
தொடர்ந்திருந்த
நினைவுப்பின்னல்கள்
நிறமிழக்கின்றன,
காதோரமாய் நகருமொரு
எறும்பின் தேடலில்.

2 comments:

Rajthilak said...

என்ன ஆபிஸ்-ல நல்ல தூக்கமா???

சுரபி said...

ஹிஹிஹிஹி...