Saturday, March 6, 2010

தூறல் தொடங்குமொரு பொழுதில்..

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறாய்…

முன் நெற்றியிலொட்டிய
பத்தைப் பிரித்தென்
கைகள் பதித்துக்கொள்கிறாய்..

சிறிதுநேர கதகதப்பில்
சூடிறங்கியதாய்
இமைகள் பிரிக்கிறாய்…

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறேன்
நான்…

1 comment:

Unknown said...

cute...............