Saturday, March 27, 2010

அலைபேசி..

தெரியாமல் உதிரும்
குறுஞ்செய்திகளில்
மொட்டுவிடுகிறது நட்பொன்று..

தெரிந்தே தவறவிடும்
அழைப்புகளில்
பூக்கிறது காதலொன்று..

நெடுநாளைய தேடலின்
குரல்களில் கரைகிறது
கண்ணீர்த்துளியொன்று..

அடுத்தவரின் அந்தரங்க
பதிப்புகளில்
துளிர்க்கிறது வன்மமொன்று..

கழுத்து சாய்ந்தவொரு
பயணத்தில்
நிகழ்கிறது மரணமொன்று..

மனித உணர்வுகளை
உள்ளங்கைக்குள்
வைத்தாடுகிறது - உயிரற்ற
கையடக்கப் பெட்டியொன்று..

(தலைப்பிட்டு கவிதை எழுதும் சிறுபோட்டிக்காக எழுதியது.. )

2 comments:

Rajthilak said...

நல்லா இருக்கு, ஏனோ இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் ....

சுரபி said...

Sure!!!!!!!!! Thanks for ur comments...