Friday, March 12, 2010

துரை யாதவா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு, சென்னை அண்ணா யுனிவெர்சிட்டில கணினி பொறியியலில் ஒரு சீட்டு வாங்கி(சீட்டு வாங்க தான் அங்க கால் வைக்க முடிஞ்சுது) ராமநாதபுரம் போய் சேர்ந்தேன்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் பயம் நிரம்பி வழிந்தது.கழுத்து ,வகுப்பறை கரும்பலகை தவிர்த்து வேறெங்கும் திரும்பாது.முதல் வருடத்தில் அனைத்து பொறியியல் பாட பிரிவு மாணவர்களும் கலந்து தான் இருப்பார்கள்.அதனால் பிரிவிற்கேற்ப காகித கப்பல்,காகித ஏரோப்ளேன், காகித கேமரா என்று அவ்வப்பொழுது பறந்து வரும்.

நான் அத்தனை பசங்கள மொத்தமாய் அதற்குமுன் பார்த்ததில்லை. வகுப்பறைக்குள் நுழையுமுன் நிமிர்ந்து பார்த்தால் தலை சுத்தும்.அத்தனை மாணவர்கள்.தொண்ணூறு மாணவர்கள்.பதினாறு மாணவிகள்.முதல் பெஞ்ஜில் சுவரோரமாய் எனது இருக்கை.எனக்கு அடுத்த பெஞ்சில் சில மாணவிகள்.அதை தவிர்த்து அத்தனை இடங்களையும் பசங்க தான் ஆக்கிரமித்திருந்தார்கள்.

முதல் வருடம் எல்லா பாட பிரிவுகளையும் படிக்க வேண்டும்.ஆங்கிலம், பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மேத்ஸ்,மெக்,சிவில்,எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,கம்ப்யூட்டர் என எல்லாமும் படிக்க வேண்டும்.அவ்ளோ பெரிய பெரிய புத்தகங்கள்,பெரிய பெரிய ஆசிரியர்கள்(அதான் பேராசியர்கள்..),நுனி நாக்கு ஆங்கில மாணவர்கள் என எல்லாருமே பயமுறுத்தினார்கள்.

முதல் வருடம் என்பதால்,வகுப்பெடுக்க வருவோர் போவோர் எல்லாம் பேர், ஊர் கேட்டார்கள்.இதில் எழுந்து வேற பதில் சொல்லணும்.முதல் வருடம் முழுதும் எழும்பி நிற்கவே கூச்சமாய் இருக்கும்.மற்றும் எனக்கு என் பெயரை உச்சரிக்க பிடிக்காது."ர"வை உச்சரிப்பதில் பிரச்சனை.தயங்கி தயங்கி தான் சொல்வேன்.பேர் கூட பிரச்சனை இல்லை.ஊர் ரொம்ப பிரச்சனையாக இருந்தது.முதலில், "சங்கனாபேரி" என்றேன். பேராசிரியர்கள் புருவத்தை தூக்கினார்கள்.பின், "தென்காசி" என்றேன்.சிலர் சிரித்தார்கள் சிலர் மறுபடியும் புருவத்தை தூக்கினார்கள். பின், "திருநெல்வேலி" நிரந்தரம் ஆனது. யார் கேட்டாலும் திருநெல்வேலி தான்.
இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், திருநெல்வேலி என்றபின் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

பின்னொரு வகுப்பில், மோட்டாவான பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஆள் அமிதாப் மாதிரி நல்ல உயரம்.மன்சூர் அலிகான் மாதிரி உடல். நிறம் அக்மார்க் தமிழன் நிறம். அரிவாள் இல்லாத அய்யனார்.இவரை மாதிரியே பள்ளியில் கணக்கு ஆசிரியர் இருந்ததால் முதலில் அவ்வளவு பயம் இல்லை. பின் பேச ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகள் கொட்டினார்.வகுப்பறை, மாணவிகள் அதெல்லாம் அவருக்கு தெரியவில்லை. மனதில் பட்டதையெல்லாம் பேசினார், ஒரு ரவுடி மாதிரி. "எனக்கு நண்பனா தோளில் கைபோடவும் தெரியும், எதிரினு தோணுச்சுனா கைபோட்டுட்டு இருக்கும்போதே கழுத்தை நெறிக்கவும் தெரியும்" அப்படின்னு லெக்சர் கொடுத்தார். அதுவரை ஆட்டம் போடும் வகுப்பறை, இவரது வகுப்பில் அமைதியாய் இருந்தது.

அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு ஆரம்பித்தார். நான் வழக்கம் போல திருநெல்வேலி என்றேன்."திருநெல்வேலில இருந்து எத்தனை கிலோமீட்டர்?" என்றார். நான் முழித்தேன். 'மொச பிடிக்கற மூஞ்சிய பாத்தா தெரியாது?' என்று அவர் நினைப்பதாய் பட்டது.
"நூறு கிலோமீட்டர் இருக்கும்" என்று உண்மையை சொன்னேன்.
"நூறு மீட்டர் தள்ளி இருந்துட்டு திருநெல்வேலின்னு சொன்னா திருநெல்வேலி உங்க ஊர் ஆகிடுமா?" என்றார்.
நிக்க வச்சு இப்படி பேசராறேனு அழுகை வந்தது. 'சொந்த ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. பக்கத்து ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. மாவட்டம் சொன்னா திட்டறாங்க'னு நெனச்சுட்டு பொய் சொல்ல தீர்மானித்தேன்.
"தென்காசி" என்றேன்.
"தென்காசிதானா?? இல்ல அதுல இருந்து பத்து கிலோமீட்டரா? "
'என்னடா இது வம்பா போச்சு.. எதோ தெரிஞ்சவர் மாதிரியே பேசறாரே.. பொய் சொல்லிட்டோம்.. அதையே காப்பாத்துவோம்'னு, "ஆ..ஆமா" என்றேன்..
"தென்காசின்னு சொன்னா எங்களுக்கு தெரியாதாக்கும்? உக்காரு", என்றார்.
மொத்த வகுப்பிற்கு முன்னை இப்படி கத்தறாரேனு கஷ்டமா இருந்தது. தலையை தொங்கபோட்டுட்டு உக்கார்ந்தேன். எல்லாரும் பேர் சொல்லி முடித்ததும், தொண்டையை கனைத்து அவரை அறிமுகம் செய்து கொண்டார்.

"கணேசன், கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்"..

'ஆகா..வச்சுட்டாங்களே ஆப்பு.. இவரோட இன்னும் நாலு வருஷம் மல்லுக்கட்டனுமா????'

7 comments:

Unknown said...

இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், திருநெல்வேலி என்றபின் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.//

நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் :P

சுரபி said...

neenga vera etho nenacha naan enna panna??

thirunelveli is a well known place yaar.. thats y... ;)

Rajthilak said...

///பின்னொரு வகுப்பில், மோட்டாவான பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஆள் அமிதாப் மாதிரி நல்ல உயரம்.மன்சூர் அலிகான் மாதிரி உடல். நிறம் அக்மார்க் தமிழன் நிறம். அரிவாள் இல்லாத அய்யனார். ///

கணேசன் இப்ப என்ன பண்றார் ???
:)

Unknown said...

Already i heard this story but really intresting my husband also enjoy the story very much.very happy to see u like this.finally u bring it out fully. dont stop this.pls continue this and try to reach next level.i am really proud of u (not only me Amio Gals )

NavaS said...

Innum neraiya unkita irunthu edirparkurein :) Continue the story till end of college (But only truth )

Maduraiveeran said...

It would be great if u post it in FB also ;)

சுரபி said...

Indha pakkam vandhe pala maasam aachu.. inime enga elutharathu?? Karthik, yen FB nalla irukarathu unaku pidikalaya?