Saturday, March 6, 2010

காணாமற் போன கவிதை..

எழுதத் தொடங்கி
நடுவில் நிறுத்தியிருந்த
கவிதையொன்றை
காணவில்லை..

பத்திரப்படுத்தியிருந்த
இடம்
புலப்படவேயில்லை…

மழையின்
கடைசித்துளி போலவும்
வெயிலின்
கடைசிக்கதிர் போலவும்
நினைவிலகப்படவில்லை..

ஒருவேளை,
தலையணையின்
பின் படர்ந்து
பின்னெழும்
நீண்ட கனவில்
மெதுவாய்ப் புலப்படலாம்..