Saturday, March 6, 2010

ஊடல்..

உன்னிடம் சண்டையிட
ஓராயிரம்
காரணங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் புன்னகையில்
தொலைந்துவிடக் கூடுமென்று
பொத்தி வைத்திருக்கிறேன்..

பிந்தொடருமுன் கொஞ்சலில்
காய்ந்து விடுமென்று
காவல் இருக்கிறேன்..

சலித்துக் காட்டுமுன்
பொய்க் கோபத்தில்
காரணங்களின்றி – அவை
உதிர்ந்துவிடுமெனத் தெரிந்தும்
சண்டையிடக் காத்திருக்கிறேன்..