Saturday, March 6, 2010

இதுவும் கடந்து போகும்..

எழுச்சிமிக்க
கவிதையொன்றின்
காரணிகள்,
சிறுமூளையின்
மூலம் தொட்டுணர்ந்து
முடங்கிப் போயிருந்தன..

பின்னாளில்
எழுதிக் களைத்த
கிறுக்கலின் போதும்
பேசித் தீர்த்த
வார்த்தைகளின் போதும்
கொஞ்சமாய் எட்டிப்பார்த்து
கண்ணடித்துக் கொண்டன..

காரணிகளுக்கான
காட்சிகள் கண்டபோது
சிறிது துளிர்த்துக்கொண்டன..

முதலாய் வந்த முறுக்கலிலும்
பின்னெழுந்த சிலிர்ப்பிலும்
உயிர்துக் கொண்டன..

செயல்படும் திசையற்று
எழும்பிவந்த இயலாமையில் - அவை
மரணித்துப் போயிருந்தன..